வியாழன், 20 மார்ச், 2014

பிரபஞ்சமும் மனித உடலும்

அடுத்துள்ள மந்திரங்கள்
பிரபஞ்சத்தை புருஷனின் உடலாகப் போற்றிப்
பாடுகின்றன. சந்திரனை மனத்துடனும்,
சூரியனைக் கண்களுடனும், முகத்தை இந்திரன்
– அக்னியுடனும், காற்றை மூச்சுடனும்
தொடர்புறுத்தும்
கவிதை உருவகங்கள் ஆழமானவை.
முடிவற்று விரிந்து செல்லும்
விண்வெளி புருஷனின்
தொப்புள்
என்று கூறியது அபாரமான அழகியல்.
இதையே மேலும் விரித்து,
விஷ்ணு நாபியிலிருந்து மலர்ந்தெழும்
தாமரையில் அமர்ந்து படைப்புக் கடவுளான
பிரமன் தனது சிருஷ்டித் தொழிலைத்
தொடங்குவதாக பிற்காலத்திய
புராணங்கள் அற்புதமான
கலைநயத்துடன் விவரிக்கின்றன.
“குழலழகர் வாயழகர் கண்ணழகர்,
கொப்பூழில்
எழுகமலப் பூவழகர் எம்மானார்”
என்று ஆண்டாள் சிலிர்ப்புடன்
பாடுகிறாள். உடலியல் ரீதியாக,
தாயின் கருவில் இருந்து உதிக்கும்
ஒவ்வொரு உயிரின் சிருஷ்டியும்
தொப்புள்
கொடி வழியாகவே நிகழ்கிறது எ
இதனுடன் இணைத்துப் பார்க்கலாம்.
பிரபஞ்ச சிருஷ்டியை மனித உடலாக
உருவகித்து இந்தப் பழங்கவிதை பாடுவதில்
உள்ள நுட்பம் கவனத்துக்குரியது. உலகில்
எல்லா கலாசாரங்களிலும் கவிதைகள்
எழுதப் படுகின்றன. அவை முற்றிலும்
வேறு வேறான கவிஞர்களால், முற்றிலும்
வேறு வேறான இயற்கைச் சூழல்களில், சமூக
சூழல்களில் எழுதப் பட்டாலும்,
இவை அனைத்தையும் தாண்டி நல்ல கவிதைகள்
பொதுவாக
புரிந்து கொள்ளவும் ரசிக்கவும்
படுகின்றன.
இது எப்படி நிகழ்கிறது என்பது குறித்து ஜ
சமீபத்தில் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார்.
அதில் அவர் கூறுகிறார் –
”சர்வதேச அளவில், மானுடப்
பொதுவாக,
கவிமொழியைத்
தீர்மானிக்கும்
பொது அம்சம் என்ன?
மானுட உடல்தான் என்று எனக்குப்
படுகிறது. மனித மொழியைத்
தீர்மானிப்பதில் உடலுக்குள்ள இடம்
மிக முக்கியமானது. உடலின் வடிவம்
மூலமே பிரபஞ்சம் அளக்கப்படுகிறது.
உடலின் அறிதல் மூலமே பிரபஞ்ச
இயல்புகள் அடையாளப் படுத்தப்
படுகின்றன. உடலினூடாக
அன்றி தூலப்
பிரபஞ்சத்தை அணுகுவது சாத்தியமல்
என்பதால் உடலையே நாம்
பிரபஞ்சமாக அறிகிறோம் என்றால்
அது வியப்பில்லை.”
ஜெயமோகன் இங்கு கண்டடையும் இந்தக்
கவி தரிசனம், வரலாறு புகமுடியாத
தொல்பழங்காலத்தில் இந்த
மண்ணில் காலூன்றி நின்று வேத ரிஷிகள்
பாடிய மகத்தான கவிதைகளின்
எதிரொலியே ஆகும்.
இந்த தரிசனத்திலிருந்து தான்,
இந்து மதத்தில் உருவ
வழிபாடு என்பது உருக்
கொள்கிறது. மனிதன் தன் உடல்
மூலமாகவே பிரபஞ்சத்தை அறியமுடியும்,.
அதனால் தான், பிரபஞ்ச வடிவான
இறைவனை மனித வடிவிலோ அல்லது மனித –
மிருக –இயற்கை சார்ந்த
வடிவங்களிலோ பிரதிஷ்டை செய்தார்கள்.
தெய்வங்களின் உறைவிடங்களான
கோயில்களையும் மனித உடலின்
குறியீடாகவே அமைத்தார்கள். இந்த
வகையில் தியானிப்பதும் வணங்குவதும்
மனிதனை தளைபட்ட அறிதலில்
இருந்து தளையற்ற பிரபஞ்ச
அறிதலை நோக்கி இட்டுச் செல்லும்
என்று நமது ரிஷிகள் கருதினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக